தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Sakthi

Updated on:

Law and order is not good in Tamil Nadu!! Former minister who spoke in support of Thirumavalavan's opinion!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!!
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் திருமாவளவன் கூறிய கருத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை திருப்தியாக இல்லை என்று திருமாவளவன் அவர்கள் பேசியது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுக்குரியது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் “காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் இருந்த பொழுதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திமுக கட்சி கொண்டாடுகிறார்கள். இதற்கு தார்மீக அடிப்படையில் இவர்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா என்று அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டுக்கான தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தீர்ப்பு” என்று அவர் கூறினார்.