சிவனின் அடியும் முடியும் புதைந்ததன் ரகசியம் தெரியுமா?

0
98

சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரை காணலாம். இவருடைய பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும், மேலே ஒரு அண்ணமும், கீழே ஒரு பன்றியும், செதுக்கி வைத்திருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் விஷ்ணுவாகவும், கருதப்படுகிறது.

இவர்கள் சிவனின் அடி முடியை காண்பதற்கு போட்டிட்டதாக ஒரு புராணக் கதை இருக்கிறது, உண்மையாக இதன் தத்துவம் என்ன என்பது தங்களுக்கு தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக இருக்கிறார். லிங்கம் என்பது நீள் வெட்ட வடிவமுடையது சதுரம், செவ்வகம், முக்கோணம், எதுவாக இருந்தாலும், அதற்கு ஆரம்ப இடமும், முடியும், இடமும் உண்டு.

ஆனால் வட்டத்துக்கு ஆரம்பமுமில்லை முடிவுமில்லை சிவனும் ஆத்யந்தமில்லாதவர் என்பதை இந்த வடிவம் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ, மகளிடமோ, தொலைபேசியில் பேசினால் திருப்தி இருக்காது.

நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும் அதேபோல சிவனை நேரில் பார்த்தால் திருப்தி வர அவருடைய உருவத்தை நீள்பட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி தலையும், திருவடியும், புதைந்திருப்பதைப் போல அவர் ஆதியந்தம் இல்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்திருக்கிறார்கள்.