மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதியாக தமிழ்நாடு கேரளா எல்லையோரமாக நிலம்பூர் உள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி என்றாலும் தமிழக எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த பகுதி இருப்பதினால் தமிழர்கள் சிலர் வசித்து வருகின்றனர்.
மேலும் பணி நிமிர்த்தம் காரணமாகவும் அங்கு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஜூன் 19ஆம் தேதி அன்று பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஜூன் 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்காக நிலம்பூர் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.