பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

Photo of author

By Madhu

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

Madhu

தமிழ்நாடு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு கடன் உதவி கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவி குழு நடத்தி வருகின்றது.

அந்த குழுக்களின் மூலம் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியாக அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் காய்கனி கடை, பலகாரக் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம், பூ வியாபாரம், மீன் வியாபாரம், உள்ளிட்ட தொழில்களை நடத்த கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் பயன்பெற விண்ணப்பதாரர் சிறுபான்மையினர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அவர்கள் குழுவில் குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் ஒரு சுய உதவி குழுவில் 60 சதவீதம் சிறுபான்மையினராக இருப்பது அவசியம். மீதமுள்ள 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர வகுப்பினர் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும் குறைந்தபட்சமாக 10 உறுப்பினர்களும் ஒரு குழுவில் இருப்பது அவசியம் சிறுபான்மையினர் குழுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இதில் இரண்டு திட்டங்கள் இருக்கும் நிலையில் முதல் திட்டத்தின் அடிப்படையில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியாகவும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குள் தவணைத்தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தும் வசதியும் உள்ளது. இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழுவில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமும், பெண்களுக்கு எட்டு சதவீதமும் வழங்கப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் தவணை தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.