சுய உதவிக் குழுவில் இருக்கீங்களா; லட்ச கணக்கில் பணம் பெறலாம் எப்படி தெரியுமா!

Photo of author

By Madhu

சுய உதவிக் குழுவில் இருக்கீங்களா; லட்ச கணக்கில் பணம் பெறலாம் எப்படி தெரியுமா!

Madhu

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 1,168 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா ஈரோடு வேளாளர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 996 குழுக்களுக்கு 296.20 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 8867 மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 94,281 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 10% பேர் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கின்றனர்.

மீதமுள்ள மகளிருக்கு இந்த திட்டத்தில் இணைந்து தங்கள் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிர் குழுக்களின் வங்கி கடன் இணைப்புக்கு 1120 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவை வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மகளிர்களுக்கு சுய உதவி குழுவின் வங்கி இணைப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு 31 லட்சம் கடன் உதவி மற்றும் 67 பயனாளிகளுக்கு 62 லட்சம் தொழில் முனைவோர் கடன் உதவி என மொத்தம் 96.20 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்டம் முன்னோடி ,வங்கி மேலாளர், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.