ஏப்ரல் மாதம் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருக்கின்றனர்.
அதனால் அந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக கணக்கிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானிற்கு உகந்த நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அதுபோல ஜூன் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை அன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருப்பதினால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.