தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறிய வழக்கில் 5.42 லட்சம் பேர் கைது

Photo of author

By Pavithra

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறிய வழக்கில் 5.42 லட்சம் பேர் கைது

Pavithra

கொரோனா தொற்று காரணமாக
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இன்று வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது.

பெரும்பாலானோர் இந்த போது முடக்கத்தையும் மீறி அவசியமின்றி வெளியே சுற்றியதால் மார்ச் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை அதாவது மே 28 ஆம் தேதி வரை 5.08 லட்சம் வழக்குகள் மூலம் 5.42 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் விதிகளை கடைபிடிக்காத பல வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு அபராதம் விதித்தும் நூதன தண்டனை அளித்தும் எச்சரித்து காவல்த் துறையினர் அனுப்பினர்.

நேற்றுவரை அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 8.36 கோடி ரூபாய் ஆகும்.