அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!

0
139

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ் பெற்ற வண்ணார சாலை நாகராஜா கோவில் இருக்கிறது இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தை இல்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப எக்சி அம்மாவையும் மனமிரக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது என்று சொல்லப்படுகிறது.

இதற்காக பல நாடுகளிலிருந்து சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் திரளான மக்கள் அனைத்து தினங்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை, வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு மிக்கதாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராநோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு இங்கே நடத்தப்படுகிறது.

ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு கடுகு, சிறு பயிறு உள்ளிட்டவற்றையும், சர்பதோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்றுநாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவரை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால், பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் உள்ளிட்டவற்றை படைக்க வேண்டும்.

நாகதோஷ பரிகாரம் சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை. பால், பழம் நிவேத்தியம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

மன்னார்சாலை கோவிலில் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு நிர்மல்ய தரிசனம் 5:30 மணிக்கு அபிஷேகம் 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடைதிறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும் வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர், முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டு துணி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கோவில் கவுண்டர்களில் கிடைக்கும்.