TN: தமிழக அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்களை வழங்கவில்லை என போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 15 வது ஊதிய ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஊதிய உயர்வு உடனடியாக பணப்பலன்கள் வழங்க வேண்டும் ,தற்காலிக ஒப்பந்த ஓட்டுனர்களை நியமனம் செய்யக்கூடாது, பணியில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அமைச்சர் இதுகுறித்து கூறுகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,09,787 பணியாளர்கள் 15வது ஒப்பந்தத்தின் கீழ் 48,006 ஓட்டுநர்கள் 42,825 நடத்துனர்கள் மற்றும் 13,003 தொழில்நுட்ப பணியாளர்கள் 2529 இதர பிரிவு பணியாளர்களுக்கு பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் ஆறு சதவீதம் உயர்த்தி உரிய நிர்ணயம் செய்யப்பட்டது.
2024 செப்டம்பர் முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் தங்களுடைய பனிக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை குறித்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை ஒருமுறை தளர்த்தி ஜூன் 30-ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.