அமைச்சர் கே என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரே கூட்டணியில் தூற்றவும் துதியும் பாடுகின்றனர். அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இழந்து நிற்பார் எனவும் தெரிவித்தார். இதற்கு உட்கட்சி பிரச்சனை, கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்ஜிஆர் மாளிகையிலும் கமலாயத்திலும் தைலபுரத்திலும் இருந்து தான் வருகின்றது.
இதற்கு பதில் கூறாமல் இருக்கும் பொம்மையாக பழனிசாமி இருக்கின்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடு தனமாக அரசியல் செய்து வருகின்றார். உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச்சினையை மறைக்க அறிக்கை அரசியல் செய்துவரும் நிலையில் தஞ்சையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங்கூட்டை கிழித்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி வருகின்றனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதை செய்தார்களா. பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச வை-பை இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்கள் அதனை நிறைவேற்ற வில்லை.
இதுபோல ஏராளமான வாக்குறுதிகளை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாமல் இருக்கின்றனர். மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் இருக்கின்றார். எந்த வாக்குறுதியுமே நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல இல்லாமல் சொன்னதை மட்டும் அல்லாமல் சொல்லாததையும் நிறைவேற்றி வருகின்றார் எனவும் அதிமுக ஆட்சியை அமைச்சர் விமர்சித்துள்ளார்.