சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

0
139
Mystery person attack on supermarket! Police shoot!
Mystery person attack on supermarket! Police shoot!

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

நியூசிலாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 6 பொது ஜனம் காயமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு எனும் மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நியூ லின் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கத்தியுடன் வந்த ஒரு 20 – 30 வயதான வாலிபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.

அதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த நியூஸிலாந்து போலீசார் அந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அதே இடத்தில் அவர் பலியாகிவிட்டார். அதன் பிறகு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் இலங்கையை சேர்ந்த நபர் என்றும், ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இப்படி செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதெல்லாம் தேவையா? பஞ்சம் பிழைக்க போன இடத்தில் அதுமட்டும் செய்தால் பரவா இல்லை. எதற்கு இந்த வேண்டாத வேலை. படிக்க போனால் அதுமட்டும் செய்தால் பெற்றோருக்கு  பெருமையாக இருக்கும். அதை விட்டு மற்றவர்களுக்கு அடிமையாகி அவர்கள் செய்யும் செயலை நாம் செய்துவிட்டு எதற்கு இந்த அவப்பெயர்.

Previous articleமக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!
Next articleஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!