தமிழகத்தில் கடந்த தேர்தலின் பொழுது திமுக மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. திமுக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.14 கோடி மகளிர்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர் களுக்கு இத்திட்டம் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் வந்த நிலையில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் சிறப்பு முகங்கள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து சுமார் 15000 பெண்கள் நீக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இறந்த பயனாளிகள், அரசு வேலைகளில் சேர்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி மற்றும் யூபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத்துறை தேர்வுகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசு பணியில் சேர உள்ளனர்.
அதனால் இவர்களின் பெயர்களையும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்தால் நீக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டையில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அரசு வேலையில் இருந்தால் அந்த ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப தலைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அதனால் அவர்களுடைய பெயர் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனால் தற்போது 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.