Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

Photo of author

By Madhu

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

Madhu

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் சென்னையின் அண்மையில் ஏற்படும் மரணம் என குறிப்பிட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே மிகவும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.