நிரந்தர கணக்கு எண் என்பது சுருக்கமாக பான் கார்டு என கூறப்படுகின்றது. 10 இலக்கு எண்களை கொண்ட அடையாள அட்டையாக உள்ளது. இந்திய குடிமக்களுக்கான முக்கிய அடையாளமாகவும் பான் அட்டை பார்க்கப்படும் நிலையில் பண பரிவர்த்தனைகளுக்கு அவசியமானதாக இருக்கின்றது.
பான் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டு ஆக்டிவேடாக இல்லை என்றால் அல்லது உங்களிடம் இரண்டு பான் அட்டைகள் இருந்தால் வருமானவரித்துறை தற்போது பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பலரும் தங்களுடைய பான் கார்டு ஆக்டிவாக இருக்கின்றதா இல்லையா என தெரியாமல் உள்ள நிலையில் அதை பயன்படுத்துகின்றார்களா அல்லது அவர்களுக்கே தெரியாமல் இரண்டு பான் அட்டை வைத்திருக்கிறார்களா என்பதை உடனடியாக கவனிக்க வேண்டும். மேலும் பேன் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு, வங்கி முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல், போன்ற முக்கியமான நிதி பரவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பான் அட்டை ஆக்டிவாக இருக்கின்றதா என்பதனை வீட்டில் இருந்தே எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
அதற்கு வருமான வழித்துறையின் மின்னணு தகவல் வலைதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு கீழே உள்ள குயிக் லைன்ஸ், அல்லது இன்ஸ்டன்ட் இ சர்வீஸ் பிரிவில் வெரிபை யுவர் பான் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பான் கார்டு எண், முழு பெயர் ,பிறந்த தேதி மற்றும் பான் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு தங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருக்கின்றதா, இல்லையா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக அதில் ஒன்றை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இரண்டு பான் அட்டை வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வருமானவரித்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படலாம். எந்த ஒரு சிக்கலிலும் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு உடனடியாக பான் கார்டை ஆக்டிவேட் செய்து, இரண்டு அட்டைகள் வைத்திருந்தால் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .