தீபாவளி போனஸ்! விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ஹேப்பி நியூஸ்!

0
64

விவசாயிகளுக்கான பி எம் கிசான் திட்டத்தில் 12வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் 12 வது தவணை நீடிக்காக ஆவலுடன் காத்திருக்கும் விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அரசின் 100% நிதி உதவியுடன் கூடிய மத்திய துறை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஒரு வருடத்திற்கு 6 ஆயிரம் வேதம் 3 சமநிலை தவணைகளில் வருமான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி உதவியானது இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தளாய் 2000 வீதம் 3 சமநிலை தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் திட்ட வழிகாட்டுதல்களின் படி நிதி உதவி பெற தகுதியான விவசாயி குடும்பங்கள் அடையாளம் காணப்படுகிறது.

கடந்த மே மாதம் பிரதான் மந்திரி கிசான் சமன் நீதி திட்டத்தின் 11 வது தவணையை மத்திய அரசு வெளியிட்டது இந்த நிலையில் 12வது தமனை நீதியானது தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட இருக்கிறது. தீபாவளிக்கு முன்னதாக வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 12 வது தவணை நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட கூடும் என்று தகவல் கிடைத்திருக்கின்றன.

முன்னணி ஊடகங்களின் சமீபத்திய அறிக்கைகளின் படி அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இரண்டு நாள் உச்சி மாநாடு மற்றும் கிசான் மாநாட்டின் தொடக்க விழாவில் 12வது தவணை நிதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தான் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பி எம் கிசான் பயனாளிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படலாம் என்று தகவல் வெளியானது ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அதே சமயத்தில் இந்த நிதி பரிமாற்றம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தற்போது வரையில் உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் திட்டத்தின் மூலமாக பலன் பெற பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYc கட்டாயமாகிறது. இதற்கு நடுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் eKyc பிராசஸ் முடித்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற தகுதி உடையவர்கள் என்று அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்கனவே eKyc காலக்கெடுவை மே மாதம் 31ம் தேதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன் பிறகும் ஒரு மாதம் வரையில் அவகாசம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து PM Kisan மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் அல்லது பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும் https://pmkisan.gov.in
இல்லை என்றால் ஆண்ட்ராய்டு டிவைஸில் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று PM Kisan App என டைப் செய்து, அங்கிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Beneficiary Status ஆப்ஷனை கிளிக் செய்து கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் என்டர் செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் எவ்வாறு ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்? – PMkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்.

ஹோம்பேஜில் காணப்படும் Beneficiary Status ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர், மொபைல் நம்பரை இந்த மூன்றில் எதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும்.
பின் Get data என்பதை கிளிக் செய்தால், தேவையான விவரங்கள் டிவைஸின் ஸ்கிரீனில் காட்டப்படும்.