பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

0
173

நேற்று பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 99 பயணிகளுடன் கராச்சி வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானம் முழுவதும் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த 99 பயணிகள் 8 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த விபத்தில் பலியானார்கள்.இந்த தகவலை கராச்சி மேயர் உறுதிப் படுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleயாரையோ திருப்தி படுத்த என் மீது கைது நடவடிக்கை என ஆர் எஸ் பாரதி விமர்சனம்
Next articleஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவப் படைகள் இடையே தாக்குதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here