முதலமைச்சரின் காலை உணவு திட்டம்! ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!

0
105

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

இது குறித்து இன்று வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து பள்ளி தினங்களிலும் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்குவதற்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்வது தொடர்பாக ஆணை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110 கீழ் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, முதல் கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேலைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஏனையவற்றுக்கிடையே தமிழ்நாட்டிலிருக்கின்ற நகராட்சி மாநகராட்சி ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,095 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை 2022 2023 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.

முதல்வரின் காலை உணவு திட்டத்தினை திறம்பட செயல்படுத்த இல்லம் தேடி கல்வித் திட்ட அலுவலர் இளம்பகவத் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுவதற்கான ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.