அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
74

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அடுத்த மூன்று மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, கரூர் ,திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.