பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் அடுத்தடுத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக ராமதாஸ் பதில் கூறுவதாக தெரிவித்த நிலையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சியை யார் உரிமை கொண்டாடுவது என பல்வேறு போட்டி நிலவி வருகின்றது. ராமதாஸ் நீக்கம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி உடனடியாக நியமனம் செய்து போட்டிக்கு போட்டி அரசியல் செய்து வருகின்றனர் இந்நிலையில் தைலபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பாமக மாநிலத் துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமதாஸை சந்தித்து பேசினார்கள்.
பாமகவில் 27 மாவட்ட செயலாளர், ஆறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமகவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா பாமக பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என இன்று பதிலளிப்பதாக ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மாநிலங்களவை எம்பி சீட்டு அன்புமணிக்கு கிடைக்கவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.