ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

Photo of author

By Madhu

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

Madhu

ரேஷன் கார்டு என்பதும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் ரேஷன் கார்டில் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. ரேஷன் கார்டில் eKYC  என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் உண்மை தன்மையை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் விரல் ரேகையை பதிவு செய்வதற்காக கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு  நிரந்தரமாக சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் தற்போது வரை நீக்கப்படாமல் உள்ள நிலையில் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதால் மோசடிகள் ஏற்படுகின்றது.

இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக பயணிகளின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையும் ஆதார் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவிகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு. ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் ரேஷன் கார்டு eKYC காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதனால் தற்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்களுடைய அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்போதுதான் அரசு வழங்கும் திட்டங்களை தொடர்ந்து பெற முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் ரேஷன் கடைகளில் சென்று விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.