திருமண தடை நீக்கும் நாகம்மன் கோவில்!

திருமண தடை நீக்கும் நாகம்மன் கோவில்!

தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணம் நடைபெறுவதென்றால் குதிரை கொம்பாக தான் இருக்கிறது. ஒரு காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில்லை என்ற சூழ்நிலை இருந்தது, ஆனால் தற்சமயம் மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லை என்று சூழ்நிலை இருந்து வருகிறது. அனைத்தும் கூடி வந்தாலும் ஜாதகம் சரியில்லை, தோஷமிருக்கிறது போன்ற எண்ணற்ற பிரச்சனைகளால் திருமணங்கள் தடைப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில், இன்று திருமணத்தடை நீக்கும் ஒரு அற்புத கோவிலை பற்றி காண்போம். அதாவது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருக்கிறது அழகிய நாகம்மன் கோவில் இங்கு … Read more

நாராயணன் என்ற பெயரில் இருக்கின்ற உள்ளர்த்தங்கள்!

நாராயணன் என்ற பெயரில் இருக்கின்ற உள்ளர்த்தங்கள்!

நாராயணன் என்ற நாமத்திலிருக்கின்ற நாரம் என்ற பதத்திற்கு தண்ணீர் தீர்த்தம் என்று பெயர். பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கே துளசி தீர்த்த பிரசாதம் மிகவும் பிரசித்தம் பெற்றது. தீர்த்தம் என்பது நாராயணனின் பெயரில் பாதி என்ற காரணத்தால், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாராயணன் என்ற பெயரில் மறுபாதியிலுள்ள அயனன் என்பதற்கு படுக்கைடையவன் என்று அர்த்தம். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்கு அர்த்தமாகும். நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற … Read more

விஷ்ணு கோவில்களில் வழிபடவேண்டிய நடைமுறைகள்.

விஷ்ணு கோவில்களில் வழிபடவேண்டிய நடைமுறைகள்.

விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நம்முடைய கண்களில் பிரம்மாண்டம் தான் தென்படும். கோபுரம், ராஜகோபுரம், என்று சொல்லக்கூடிய அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வர இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என தெரிவிக்கிறார்கள். கோவிலிலுள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடமாகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நம்முடை உடலிலுள்ள கோபம், காமம், பேராசை, … Read more

சனீஸ்வரனின் தாக்கத்திலிருந்து காக்கும் தெய்வம்!

சனீஸ்வரனின் தாக்கத்திலிருந்து காக்கும் தெய்வம்!

நவக்கிரகங்களுக்கும், சனி பகவானுக்கும், பைரவர் தான் குரு. சனி பகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை வருட சனி காலம் சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சனி பகவானைப் பொறுத்தவரையில் இந்த ஏழரை ஆண்டு காலங்கள் வழங்குவது துன்பம் தான் என்றாலும் கூட இந்த ஏழரை ஆண்டு காலத்தில் அவர் வழங்கும் படிப்பினை அனைத்தும் வாழ்க்கை முழுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இதைப் பற்றி சரியாக தெரியாத சிலர் சனிபகவான் என்றாலே … Read more

குடும்பத்தில் சந்தோஷம் பெருக லட்சுமி குபேர விரதம்! எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

குடும்பத்தில் சந்தோஷம் பெருக லட்சுமி குபேர விரதம்! எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

]அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நீராடி விட்டு உடை மாற்றிக்கொண்டு நல்ல நேரத்தில் லட்சுமி, குபேரன், படம் குபேர யந்திரம், இதையெல்லாம் எடுத்து மஞ்சள் குங்குமம் வைத்து வெற்றிலை வைத்து பூஜைகள் வைக்கவேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அந்தப் படத்திற்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன்மீது நவதானியத்தை … Read more

சீதாதேவியின் தாகத்தைத் தீர்த்த வில்லூண்றி தீர்த்தம்!

சீதாதேவியின் தாகத்தைத் தீர்த்த வில்லூண்றி தீர்த்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயிருக்கிறது தங்கச்சிமடம் என்ற கிராமம் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 பீடங்களில் ஒன்றான வில்லூண்டி தீர்த்தம் இங்கு தான் இருக்கிறது. எங்கே பிரகதீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் வில்லூன்றி தீர்த்தம் எனும் இந்த புனித நீர் ஊற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது என தெரிவிக்கப்படுகிறது, சீதையை சிறைபிடித்து சென்ற ராவணனுடன் போரிட்டார். ராமபிரான். போரின் முடிவில் ராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு இந்த பகுதிக்கு … Read more

முருகப்பெருமான் 11 முகங்களுடன் காட்சி தரும் திருக்கோவில்!

முருகப்பெருமான் 11 முகங்களுடன் காட்சி தரும் திருக்கோவில்!

ராமநாதபுரம் அருகே இருக்கிறது குண்டுக்கரை என்ற கிராமம் இங்கு சுவாமிநாத சுவாமி கோவிலுள்ளது. முருகப்பெருமானுக்கு அமைந்த இந்த கோவிலில் 11 தலைகளுடன் மற்றும் 22 கரங்களுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப் பெருமான் இந்த தலத்திற்கு வந்து தங்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது. இங்கே முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் கொடுப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்கர சேதுபதி என்பவர் வசித்து … Read more

பெருமாளின் சயன கோல பெயர்கள்!

பெருமாளின் சயன கோல பெயர்கள்!

1.ஜல சயனம்- திருப்பாற்கடல் 2. தல சயனம்- பல்லை 3. புஜங்க சயனம்- திருவரங்கம். 4.உத்தியோக/ உத்தானசனம்- திருக்குடந்தை. 5. வீரசயனம்- திருஎவ்வளூர் 6. போக சயனம்- திருச்சித்ரகூடம்( சிதம்பரம்) 7. தர்ப்ப சயனம்- திருப்புல்லாணி 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)- ஸ்ரீவில்லிபுத்தூர் 9. மாணிக்க சயனம்- திருநீர்மலை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இந்த தலத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம். கேரள மாநில பவானியில் ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் கூடிய எளிமையான ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தை கேரளப் பகுதியை ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன் கட்டமைத்ததாக சொல்கிறார்கள். இந்தக் கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலை போலவே பெண்கள் இங்கே இருமுடி கட்டி செல்வார்கள். கருவறைக்குள் தரையில் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மேல்தான் புற்று … Read more

சீதா தேவியை மனதில் நிறுத்தி விரதமிருப்பது எதற்காக?

சீதா தேவியை மனதில் நிறுத்தி விரதமிருப்பது எதற்காக?

இன்னமும் கிராமப்புறங்களில் பெண்கள் அவருடைய கணவரின் உடல் நலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், சீதா தேவியை வேண்டி விரதமிருக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு இப்படி விரதம் இருந்தால் குடும்பத்தில் அமைதியான ஒற்றுமையான வாழ்க்கை நிகழும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. நான் எனது கணவருடன் தான் இருப்பேன், எந்த நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருந்து வாழ்க்கை நடத்துவோம் என்று ஒரு பெண் உறுதியான நிலையை மேற்கொள்வதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சீதா ஜெயந்தி என்றழைக்கப்படும் … Read more