முகத்தில் அதிகம் கரும்புள்ளிகள் இருக்கின்றதா? அதை நீக்க முட்டை ஒன்று. மட்டுமே போதும்!

0
256
Remove Dark Spots On Face in Tamil
#image_title

நம்முடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்க முட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு காரணம் எண்ணெய் பசை கொண்ட சருமம் தான். ஒரு சிலருக்கு முகம் எண்ணெய் வழிந்து வருவது போல இருக்கும். அவர்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். இந்த கரும்புள்ளிகள் வந்துவிட்டால் உடனே உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முகம் முழுவதும் வரத் தொடங்கி விடும்.

இந்த கரும்புள்ளிகள் நம்முடைய முகத்தின் அழகை கெடுத்துவிடும். இந்த கரும்புள்ளிகளை முகத்தில் இருந்து நீக்க பல மருத்துவ முறைகள் இருக்கின்றது. இருப்பினும் முட்டை ஒன்றை மட்டும் வைத்து எவ்வாறு கரும்புள்ளிகளை மறையச் செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

கரும்புள்ளிகளை அகற்ற முட்டையை பயன்படுத்தும் முறை…

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மேக்கப் பிரஷ் எடுத்து முட்டையின் வெள்ளைக் கருவில் தொட்டு பின்னர் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.

பிறகு முட்டையை தேய்த்த இடத்தின் மேல் டிஸ்யூ ஒன்றை வைத்து பின்னர் டிஸ்யூ மேலேயும் முட்டையின் வெள்ளைக் கருவை தேய்க்க வேண்டும். இதை பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

இது நன்கு காய்ந்த பின்னர் எடுத்துவிட்டு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் ஒருமுறை என்று செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும்.