அரசு ஊழியர்களை குஷி படுத்திய தமிழக அரசு; பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்!!

0
11

தமிழக அரசு சார்பாக தற்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வு புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம் இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜஸ்தான், திரிபுரா,உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிமுக ஆட்சி முடிந்து 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309 வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வு ஊதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு கொரோனா காலகட்டம், மோசமான நிதிநிலை குறித்த காரணங்களை கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.

Previous articleஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!
Next articleஇனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!