அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி!

0
105
Reservation for transgenders in government jobs! Central and state governments must ensure! Calcutta High Court action!
Reservation for transgenders in government jobs! Central and state governments must ensure! Calcutta High Court action!
அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு! மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி!
அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிக்கை வெளியான பிறகு கடந்த 2014ம் ஆண்டும் 2022ம் ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து 2014 மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் தனக்கு நேர்காணலுக்கான அழைப்பு தரவில்லை என்று மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவருடைய இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இராஜசேகர் மந்தா அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி இராஜசேகன் மந்தா அவர்கள் “மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய பாலினத்தை தாமாக முடிவு செய்யும் உரிமையை உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு வழங்கியது.
இதையடுத்து அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அடையாளத்தை சட்டப்பூர்வமாக வழங்குவதற்கான அங்கீகாரத்தையும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதிக்கீடு வழங்க வேண்டும். இதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
அது மட்டுமில்லாமல் 2022ம் ஆண்டு வெளியான மேற்கு வங்க அரசின் அறிவிப்பின் படி  அனைத்து பொது வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த வழக்கை தொடர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நபருக்கு ஆசிரியர் நியமன கலந்தாய்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு விடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.