வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும்.
மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% வரம்பிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால் முன்பு 75 ஆயிரத்துக்கு பதிலாக தற்போது 85 ஆயிரம் கடன் பெறலாம். இத்தகைய மாற்றம் சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அவசர நிதி தேவைக்கு தங்க நகைகளை அடமான வைப்பவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் LTV விகிதம் என்பது கடன் பெறக்கூடிய சொத்து மதிப்பின் சதவீதத்தை வரையறுப்பதாக பார்க்கப்படுகின்றது. இந்த விகிதம் அதிகரிப்பதன் மூலம் கடனில் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் கடனை மேலும் அணுகக் கூடியதாக மாற்றலாம் என ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மேலும் தனி நபர் கடன்களுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக பல தனிநபர்கள் குறுகிய கால கடன் விருப்பமாக தங்க நகைகளை வைத்து கடன்களை பெற விரும்புகின்றார்கள்.ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து முக்கிய தங்க கடன் வழங்குபவர்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளது.