மத்திய அரசு புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதன் பிறகு தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரைவில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ரிசர்வ் வங்கி பிறப்பித்த ஒரு உத்தரவாக உள்ள நிலையில் மக்களிடம் 100 ரூபாய் 200 ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதனால் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் இன்னும் சட்டபூர்வமாகவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதிகாரபூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
அதனால் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருக்கும். அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் அதிலிருந்து தற்போது தான் மீண்டு புதிய நோட்டுக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் தற்போது மீண்டும் இந்த தகவல் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.