பிரபல பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் ராக்கி பாய்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
53
#image_title

பிரபல பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் ராக்கி பாய்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

பிரபல பெண் இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் கேஜிஎப், கேஜிப்2 திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் யாஷ் அவர்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீது மோகன்தாஸ் அவர்கள் லியர்’ஸ் டைஸ், மூத்தோன் என்ற இரண்டு படங்களை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். நடிகை இயக்குநர் கீது மோகன்தாஸ் அவர்கள் தமிழில் 1988ம் ஆண்டு வெளியான என் பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு 2003ம் ஆண்டு தமிழில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தால். அதன் பிறகு சில வருடங்கள் கழிந்து தமிழில் பொய் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் மலையாளம் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்பொழுது மூன்றாவது திரைப்படத்தை இயக்க கீது மோகன்தாஸ் அவர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி நடிகை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் நடிகர் யாஷ் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கேஜிஎப், கேஜிஎப் 2 திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் யாஷ் அவர்கள் அடுத்ததாக நடிகர் பிரபாஷ் நடிக்கும் சலார் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.