அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

Photo of author

By Madhu

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

Madhu

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி, மாநகராட்சி ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், ஆகியவற்றில் நிரப்பத்தக்க காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மார்ச் வரை மதிப்பூதியம் பெரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 93 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. அதனால் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் மதிப்பூதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து கோரிக்கை பெறப்பட்டது.

ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டதால் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் தற்காலிக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.