ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

0
77

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.

 

மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி யுடன் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு தமிழ் வழங்க உள்ளது. இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது என்றும் மேலும் தேர்ந்தெடுக்கப்படும் 15 மாணவர்களில் மாதம் ரூ 2000 அரசு மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

2021 22 நடப்பு கல்வியாண்டில் முடித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் படிப்பில் கூறிய விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இன்று இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட 10 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதேபோல் மாணவர்கள் மாணவிகள் தனித்தனியே தங்கக் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது.

 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு, இயக்குனர், உலக ஆராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயில வளாகம், தரமணி, சென்னை 600113, இந்த முகவரிக்கு நேரில் சென்று சந்தேகங்களுக்கு அணுகலாம்.

 

044- 22542992 என்ற தொலைபேசி எண்ணில் மூலம் தொடர்பு கொண்டும் அணுகலாம் என்று கூறியுள்ளது.