தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு திடீர் ஒத்திவைப்பு! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு!

0
82

காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மனு வழங்கினர்கள் காவல் துறையினர் இந்த அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்டவற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டி அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிகே இளந்திரையன் நவம்பர் மாதம் 6ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜிகே இளந்தரையின் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறையினர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ். பிரபாகரன், ஜி. ராஜகோபால், என்.எல். ராஜா, வழக்கறிஞர் மனோகர் உள்ளிட்டோ வாதாடினர். இதனைத் தொடர்ந்து உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த வடக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு உளவுத்துறை அறிக்கை படி ஆய்வு செய்ததில் 2008 முதல் 2011ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிக்கையில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை உள்ளிட்ட 6 நகரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

இவற்றைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பி பிறகு அணிவகுப்பு நடத்த அனுமதி கூறி மனுதாரர்கள் காவல் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம். அதனை பரிசீலனை செய்து சட்டப்படி சரியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக்கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடத்த வேண்டும் அணிவகுப்பில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழக் கூடாது. அப்படி நடந்தால் அதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தனிநபர், மதம், ஜாதி உள்ளிட்டவற்றை பற்றி அவமதிக்கும் விதத்தில் பாடல் பாடவோ, பேசவோ, கூடாது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க கூடாது. இறையாண்மை ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படும் விதமாக செயல்படக் கூடாது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் காயத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களுடன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லக்கூடாது. அணிவகுப்பிற்கும் எந்த விதமான ஆயுதங்களுடன் செல்லக்கூடாது அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.