தொடரும் கனமழை! சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அதிரடி தடை!

0
123

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருக்கிறது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே வக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தானி பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.