Breaking News, Education, State

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!

Photo of author

By Madhu

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!

Madhu

Button

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இன்று பள்ளிக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி வரும் உதவித்தொகை குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு என இரண்டு சிறப்பு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் வெற்றி பெறும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகின்றது. அரசு பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதி உண்டு. மேலும் திறனாய்வு தேர்வு எழுதிய பிறகு 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படும். இந்த திறனாய்வு தேர்வுகள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடக புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக நடத்தப்படும். இந்த தேர்வினை எழுத விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கேட்கப்படும் அனைத்தையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக 50 ரூபாய் வள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தலாம். அதன் பிறகு திறனாய்வு தேர்வுகளுக்கான தேதி பள்ளி தலைமை ஆசிரியரால் அறிவிக்கப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களும் 1500 இதே போல் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு எழுதி பெற்றுக் கொள்ளலாம். இந்த திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொன்னதை செய்த திமுக! வாக்குறுதியை காப்பாற்ற தவறிய அதிமுக – திருமாவளவன் விமர்சனம் 

பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!!