தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.
பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் ,புத்தகப் பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.
இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
மேலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 48.95 கோடி கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தங்களது பள்ளியின் மூலம் அணுகி விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் உயர்கல்வி மாணவர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.