தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர்.
இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. ஜூலை மாதம் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் இந்த மாதமும் எந்த பண்டிகையும் வராததால் அரசு விடுமுறை கிடையாது என தெரியவந்துள்ளது.
ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக ஒவ்வொரு நடப்பு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள், பொது தேர்வு தேதிகள் ஆகிய விவரங்கள் பள்ளி கல்வித்துறை சார்பாக முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் மொத்தம் 210 நாட்கள் வேலையை நாட்களாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆகும்.
காலாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள், அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்