குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Photo of author

By Madhu

குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Madhu

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு முடிவடைந்து 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.

அதன் பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சற்று கவலை அடைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் விடுமுறை கிடைக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

தென்மேற்கு பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வரும் நிலையில் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ள நிலையில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.