போதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!

0
79

தமிழகத்தில் போதை பொருள் தொடர்பான அண்மையில் நடத்தப்பட்ட கைதானது மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதலில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய செல்போன் உரையாடல்களை வைத்து பிரதீப் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கானா நாட்டைச் சேர்ந்த ஜானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் போதை பொருட்கள் பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஆனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த பொழுது அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரதாப் தயாரிப்பில் நடித்த படத்துக்காக சுமார் பத்து லட்சத்தை கேட்க சென்றபோது, அவர் கொக்கைன் போதை பொருள் கொடுத்து பழகியதாகவும் அதன் பிறகு தானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன், தெரியாமல் தவறு செய்து விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மகனை கவனித்துக் கொள்ள ஜாமீன் வேண்டுமென்றும் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோல தான் நடிகர் கிருஷ்ணாவையும் காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

இரைப்பை அலர்ஜி மற்றும் வேகமான இதயத்துடிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றேன். அதனால் போதை பொருள் எடுத்துக் கொள்ள முடியாது என கிருஷ்ணா விளக்கம் தந்துள்ளார். போலீசார் அவரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்திய பொழுது அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் மட்டும்தான் போதை பொருள் பயன்படுத்துகின்றார்களா.

இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா, கொக்கைன்  போன்ற போதை பொருள் கலாச்சாரம் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றது. ஏன் இவர்களை மட்டும் கைது செய்தீர்கள் போதை பொருள் பயன்படுத்திய மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

Previous articleகலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!
Next articleஎதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!