அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது.
ஜூலை மாதம் 1 ம் தேதி கடந்த 2017 ல் அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் இந்த ரூ. 1,30,127 கோடியாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.23,861 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.30,421 கோடி, மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை வரி ரூ.67,361 கோடி ஆகும்.
2021 அக்டோபர் மாதத்திற்கான வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 24 சதவீதம் அதிகமாகவும், 2019-20 ம் ஆண்டு கிடைத்த வருவாயை விட 36 சதவீதம் அதிகரித்து உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.