தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதும், நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முதலில் எம்.எல்.ஏ பதவி அடுத்த அமைச்சர் பதவி அதன் பிறகு தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். கடந்த ஆண்டு மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
துணை முதல்வர் ஆக இருந்தாலும் கட்சி பதவி அல்ல திமுகவின் முக்கிய கூட்டங்களில் கூட உதயநிதியால் கலந்து கொள்ள முடிவதில்லை என பேசப்பட்டு வந்த நிலையில் உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் உதயநிதிக்கு வழங்கப் போவதாக கூறுகின்றனர். திமுகவில் திருச்சி சிவா, ஆர் ராசா, கனிமொழி, ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ,ஆகிய ஐந்து பேர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில் உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்றார், கருணாநிதியின் இன்னொரு வாரிசான ஸ்டாலினின் சகோதரி கனிமொழியும் அதே பதவியில் இருப்பது சரியாக இருக்காது, அதனால் கனிமொழிக்கு ப்ரமோஷன் வழங்க முடிவு செய்துள்ளார். அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை வழங்கிய அவரை அங்கு இருக்கையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றார்,
உதயநிதி ஸ்டாலினுக்காக தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விடுவதாக விமர்சித்து வருகின்றனர். உதயநிதி துணை பொதுச்செயலாளர் பதவி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது