தமிழகத்தில் பள்ளிகளுக்கு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் கோடை விடுமுறை முடிவடைந்து.
மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய அளவு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கவலை அடைந்து வந்தனர். கோடை விடுமுறையின் பொழுது வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறக்கப்படும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவ மழை பெய்ததால் குளிர்ச்சி அடைந்தது.
அதனால் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி திறக்கபட்ட்து. ஆனால் தற்போது நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது..
ஜூலை மாதத்தில் அரசு விடுமுறை என்று பார்க்கும் பொழுது மொஹரம் பண்டிகை மட்டுமே உள்ளது. அந்த பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மொஹரம் பண்டிகையின் பொழுது நமக்கு மறுநாள் தான் பிறை தென்படும் மறுநாள் தென்பட்டால் ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது.
அப்பொழுது சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.