தமிழகத்தில் அண்மையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 11 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் முன்பு 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது 11 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூன் 5ஆம் தேதி முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வு துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஜூன் ஐந்தாம் தேதி முதல் ஜூன் ஏழாம் தேதி வரை மட்டுமே மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுடைய மதிப்பெண் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்து தரப்படும்.