செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

Photo of author

By Madhu

செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

Madhu

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரது நிதியை பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காகவும், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்டமாக உள்ளது.

இந்நிலையில் இவை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதால் அனைவரும் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி சேமிக்க தொடங்கி வருகின்றனர்.

இந்திய அஞ்சல் துறையின் மூலம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றது. இவை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கின்றது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரங்கள், அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் அடங்குகின்றது.

மேலும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடையே கிடைத்துள்ளது. பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் நலனுக்காக சேமிக்கப்படும் திட்டமாக அமைந்துள்ளது.

பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. பெண் குழந்தைகளுக்கு 21 வயதில் 50 லட்சம் கிடைக்கக்கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது.

அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தபால் துறையின் சார்பாக மாவட்ட தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டது. அதற்காக சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்தனர்.

மேலும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென் மண்டல தபால் துறையில் மட்டும் ஜனவரி மாதம் வரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர் செல்வமகள் திட்டத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதினால் ஜூன் 26 ஆம் தேதிக்குள் குறைகளை அனுப்பலாம்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் பெருபவர்களின் முகவரி, விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றிற்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.