சூரிய விரதம் அனுஷ்டிக்கும் முறையும் பலன்களும்!

0
72

ஞாயிறு விரதம் அல்லது சூரிய விரதம் இருக்க விரும்புபவர்கள் அனைத்து காலங்களிலும் இந்த வருடத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் ஐப்பசி மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்வது மிகவும் சிறப்பாகும்.

இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே எழுந்து குறித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறு அவருக்குறிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

அதன் பிறகு நவகிரக சன்னதிக்கு சென்று சூரிய பகவானுக்கும் செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள், சிறிதளவு வைத்து நெய் தீபங்கள் ஏற்றி வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நெய் வைத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள் பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திட உணவு சாப்பிடாமல் நோன்பு இருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்து அதன் பிறகு சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக வழங்கிய பின்னே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை அருந்தி விரதம் இருக்கலாம்.

சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் எதுவும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் ஏற்படும். சமூகத்தில் மற்றவர்கள் மதிக்கின்ற சூழ்நிலை உண்டாகும். தந்தையின் உடல் நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை, மாந்திரீகம் உள்ளிட்டவை சூரிய விரதம் இருப்பவர்களை நெருங்காது.