டி20 உலகக் கோப்பை அணிகள்! முழு விவரம் இதோ!

0
97

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற ஏழாவது டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றைய தினம் மாலை வெளியிட்டது. இந்த உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கனவே உலக கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் இருக்கின்ற ஷேக் சயீத் மைதானம், சார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. துபாயில் வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது.

முதல் அரையிறுதிப் போட்டி அபுதாபியில் நவம்பர் மாதம் 10-ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 11ம் தேதியும், நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.இரண்டாவது பிரிவில் இடம் பெற்றிருக்கின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் ஆட்டத்திலேயே சந்திக்கின்றன. அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டி துபாயில் நடைபெற இருக்கிறது. நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அபுதாபியில் நடைபெறும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது.நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடன் இந்தியா மோதுகிறது. அதேபோல எட்டாம் தேதி ஏ பிரிவில் இரண்டாமிடம் பெற்ற அணியுடன் மோத இருக்கிறது .நவம்பர் மாதம் எட்டாம் தேதி இந்தியா ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோத இருக்கிறது.

இந்த உலக கோப்பையில் ஒட்டுமொத்தமாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் இதற்கு முன்னரே உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். அதோடு 4 அணிகள் தகுதி சுற்றில் போட்டிகளின் அடிப்படையில் இறுதி பட்டியலில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த தகுதிச்சுற்றில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் பப்புவா, நியூ கினியா, நமீபியா, போன்ற எட்டு அணிகள் பங்கேற்க இருக்கின்றனர். தகுதி சுற்று போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை t20 போட்டியில் விளையாட தகுதி பெறும்.

முதலில் இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழ்நிலையில், நோய் தொற்று பாதிப்பு இதன் காரணமாக,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பிரிவு ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றிருக்கின்றன.