அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நாடு தழுவிய ஊரடங்கா?

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலக நாடுகளில் மெல்ல, மெல்ல, பரவி உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து தொடர்ந்து வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி … Read more

பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு! கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு முன்பாக அவர் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ந்து 20 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து பல சாதனைகளை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள காலகட்டத்தில் ஒருவர் ஒரு மாநிலத்தின் 2 முறை ஆட்சியை கைப்பற்றுவது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து 2 முறை … Read more

இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்! பிரதமருடனான சந்திப்பில் போரிஸ் ஜான்சன் ஒப்புதல்!

இங்கிலாந்து சமீபகாலமாக இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்வதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. மேலும் அந்த நாடு இந்தியாவுடன் வர்த்தக ரீதியான தொடர்பை வைத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்று வந்தார். அப்போது தன்னுடைய இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் தருவாயில் நிச்சயமாக தாங்கள் இந்தியா வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துவிட்டு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து … Read more

காஷ்மீரில் ரூ2,027 கோடி செலவில் சுரங்கப்பாதை! பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்!

காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை எப்போதும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் காஷ்மீர் மாநில காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும், எப்போதும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். அதோடு காஷ்மீர் மக்கள் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவார்கள். ஆனால் அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370 ஆவது சட்டப்பிரிவு பாராளுமன்றத்தில் நீக்கப்பட்டு அதிரடி உத்தரவு … Read more

பிரதமரை கொல்ல சதி! தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த மர்ம ஈமெயில் பாதுகாப்பு படை உஷார் நிலை!

தேசிய புலனாய்வு முகமையின் மும்பை பிரிவுக்கு வந்திருக்கின்ற இமெயிலில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திரமோடியை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இமெயில் அனுப்பிய நபர் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சாதி தொடர்பான விவரங்கள் வெளியே தெரியாது என்றும், அந்த இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியை … Read more

இதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்! ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரிடம் உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது 1 மாதத்தை கடந்தும் அங்கு கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போர் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், டெல்லி வந்திருக்கின்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் … Read more

சரக்கு ஏற்றுமதியில் சாதனை இலக்கை அடைந்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பெற்றதிலிருந்து பலவிதத்தில் முன்னேற்றமடைந்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தான் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் போது அனைவரும் பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறார் என்று உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இந்தியாவின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர … Read more

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நவீன் உங்களுக்கு மட்டும் மகனல்ல அவர் இந்தியாவின் மகன்! பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான பேச்சு!

கடந்த 24ஆம் தேதி முதல் ரயில் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்போம் என்று தெரிவித்த ரஷ்யப் படைகள் தற்சமயம் மனிதர்களையும் கொன்று குவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி … Read more

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

சமீபத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியோ இந்த 5 மாநில தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஒரு புறம் பாஜகவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு சோகம் காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை … Read more

சர்வதேச மகளிர் தினம்! பெண்களை பெருமைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

பெண்களின் தியாகம், அவர்களுடைய மனவலிமை, சமுதாயத்திற்கு அவர்களுடைய இன்றியமையாத பங்கு, உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் மார்ச் மாதம் 8ஆம் தேதியான நேற்றைய தினம் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண்களை சிறப்பிக்கும் விதத்தில் பல இடங்களில் கருத்தரங்கு, சிறப்பு பொதுக் கூட்டம், உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த … Read more