நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து!!

0
108

 

நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து…

நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகை கியரா அத்வானி அவர்கள் கவனம் பெற்று வருகிறார்.

 

பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

 

பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வரும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் தொடர்பாக நடிகை கியரா அத்வானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து நடிகை கியரா அத்வானி அவர்கள் “சம்பளம் என்று எடுத்துக் கொண்டால் ஹீரோயின்களை விட ஹீரோக்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர். சம்பளம் குறித்து நீண்ட வருடங்களாக பேசினாலும் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. அவரவர்களுக்கு உள்ள திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது.

 

ஹீரோயின்களுக்கு சம்பளம் என்பது அவர்கள் எந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை பெறுவார்கள் என்பதை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படும். இதனால் நடிகைகள் அனைவரும் அவர்களுடைய நடிப்புத் திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

 

மேலும் நம்மிடம் உள்ள திறமைகளுக்கு யார் அதிக மதிப்பு தருவார்களோ அவர்களுடன் இணைந்து பணி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் இருக்கும் பொழுது சம்பளத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது” என்று கூறி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளார்.