இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Photo of author

By Madhu

இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Madhu

தமிழ்நாடு அரசு சார்பாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு மின் துறையில் 418 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அக்கவுண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளதால் நேர்முகத் தேர்வு இல்லாமல் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு ஒரு சிலர் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இன்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டது. அதில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் இளநிலை, மின் ஆய்வாளர், உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 615 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த நேர்முகத் தேர்வு இல்லாத தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுகளுடன் தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 416 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடக்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்டன்ட் இன்ஜினியருக்கு 391 காலி பணியிடங்களும் அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் 25 பணியிடங்கள் என மொத்தம் 416 பணியிடங்கள் உள்ளது. தமிழக ரப்பர் கழகத்தில் ஒரு உதவி ப்ரோக்ராமர் மற்றும் தமிழ்நாடு மேக்னசைடு நிறுவனத்தில் ஒரு அக்கவுண்டன்ட் என மொத்தம் இரண்டு பணியிடங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனால் 615 பணியிடங்கள் மற்றும் தற்போது சேர்க்கப்பட்டுள்ள 418 பணியிடங்கள் என மொத்தம் 1033 பணியிடங்கள் தொழில்நுட்ப தேர்வில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அசிஸ்டன்ட் இன்ஜினியர் பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்று இருப்பது அவசியம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டைன் பணிக்கு பிகாம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

CA தேர்வில் இடைநிலை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயது உச்சவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவத்தினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதி வரை எழுத்து தேர்வு நடத்தப்படும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.