ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

Photo of author

By Madhu

ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

Madhu

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பில் கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வானது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 50000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக உயர்த்தப்படும் அகவிலைப்படி போல அதே அளவிற்கு தமிழக அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் எனவும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை மத்திய அரசால் இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை காலம் முன் பணம் ரூ. 10,000 ஆயிரத்திலிருந்து 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதனை தொடர்ந்து கல்வி முன் பணம் தொழில்கல்விக்கு ஒரு லட்சம் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு 50000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.