விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

Photo of author

By Madhu

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

Madhu

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 2026 தேர்தலுக்கும் தனது கட்சியை தயார் படுத்தி வரும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டலாவுக்கு 2500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண நெல் கோவிந்தலாவுக்கு 2500 ரூபாயும், சன்னராக நெல் குவிண்டலாக்கு 2545 ரூபாய் வழங்கப்படும்n இதன் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் மக்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது இது குறித்து பேசப்பட்டது. நான்கு ஆண்டுகளில் 7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலை என்பது தெரியும்.

பத்து ஆண்டுகளாக கட்ட அது என்ன ஆராய்ச்சி நிலையமா சரியாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாம். தற்போது மதுரையை சுற்றி அனைத்து பணிகளையும் நாங்கள் முடித்துக் கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க நீங்கள் உதவ வேண்டும்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.