தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் மூலம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஒரு 2000 ஊதிய உயர்வானது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு இந்த ஆண்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதுளார். மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி முன்பணம் தொழிற்கல்வி ஒரு லட்சம், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திருமண முன்பணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் மகப்பேறு விடுப்பு காலமானது முன்பு இருந்த விதிகளின்படி தகுதித்தான் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருவதினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.