இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

0
108

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும்.

உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த தொகையை திரும்ப வசூலிக்க அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தவறு செய்துள்ள அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை தொடக்கக் கல்வித் துறையில் 8000 மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வரும் நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தருவதற்கு அரசு செய்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொடங்கு கல்வியின் கீழ் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஐந்து பாடங்களுக்கும் முதன்மை பாடங்களை பட்டப்படிப்பில் படித்து உயர்கல்வி தகுதி பெற்று இருப்பது அவசியம். ஆனால் தற்போது சிலர் சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் உயர் கல்வி படிப்பை முடித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருகின்றனர்.

தமிழ் ஆசிரியர்கள் சிலர் அதுபோல சில வேறுபாடு ஆசிரியர்கள் பிகாம் எம்,காம் படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

அதனால் ஊக்க ஊதிய உயர்வு பெறும் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பாடம் தவிர மற்ற பாடங்களில் ஊதிய உயர்வு பெற்றிருந்தார் அவர்களின் பணி பதிவேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தமிழ்நாடு தொடக்க கல்வித்துறைக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Previous articleஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!
Next articleஅமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!